அழகும் ஆபத்தும் சேர்ந்த நீலநிறப் பாம்பு:
நீலநிறப் பாம்பு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பாம்பானது கொள்ளை கொள்ளும் அழகாக இருக்கும் அதே சமயதில் அது ஆபத்து விளைவிக்கும் தன்மையும் கொண்டது.
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் இந்த அரியவகை பாம்பைக் கண்டால் மக்கள் அனைவரும் குதுகலிக்கின்றனர். உலகிலே பல வகையான பாம்புகள் உள்ளனர். ஆனால் நீல நிறப் பாம்புகள் இவ்வுலகில் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளனர். பிரகாசமான நீல நிற பாம்பின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் அதன் அழகு குறித்து இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். சிவப்பு ரோஜாவின் மீது அமர்ந்திருக்கும் நீல பாம்பின் அழகை பார்த்து பார்த்து வர்ணித்து வருகின்றனர். இந்த பாம்பானது பார்க்க அழகாக இருந்தாலும், இதன் விஷமானது மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இந்த பாம்பு கடித்தால் உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் கடுமையான இரத்தப்போக்கு ஏற்படுத்தும்.
.
Leave a Comment